பதிவு செய்தது ErodeTimes
india,
news
5/31/2011 09:54:00 AM
அடுத்த இரண்டு வாரங்களில் மத்திய அமைச்சரவை விஸ்தரிக்கப்பட உள்ளது.ரயில்வே அமைச்சர் பதவியை வகித்த மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வராகி விட்டார். மத்திய அமைச்சராக இருந்த பிருதிவிராஜ் சவுகான் மகாராஷ்டிர முதல்வராகி விட்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ராஜா அமைச்சர் பதவியிலிருந்து விலகியதால், தொலைத்தொடர்புத் துறையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கூடுதலாக கவனித்து வருகிறார்.எனவே, மத்திய அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு, இன்னும் இரண்டு வார காலத்தில் மத்திய அமைச்சரவை விஸ்தரிக்கப்படலாம் மற்றும் புதிய அமைச்சர்கள் நியமனம் நடக்கலாம் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பதிவு செய்தது ErodeTimes
india
5/31/2011 09:48:00 AM
ஒரிசாவில் அம்மாநில அமைச்சர் ஒருவர் ஓரே ஆண்டில் 10-ம் மற்றும் 12-ம் வகுப்புக்கான தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று்ளார். ஓடிசாவில்,பழங்குடியினர் மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருப்பவர் ரமேஷ்சந்திரா மஜ்கி (33) இவர் கடந்த1990- 1995-ம் ஆண்டுகளில் தனது தந்தை ஜாதவ் மஜ்கி ,தொழி்ற்துறை அமைச்சராக இருந்த போது இவர் நவராங்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படித்து கொண்டிருந்தார். இப்பள்ளியில் நடத்தப்பட்ட 10-ம் மற்றும் 12-ம் வகுப்புதேர்வுஎழுதினார். இதி்ல் அவருக்கு தோல்வி ஏற்பட்டது. இந்நிலையில் அவரது தந்தை ஜாதவ் மஜ்கி இறந்ததும் படிப்பை நிறுத்திவிட்டு தந்தையைப்போல தீவிர அரசியலில் நுழைந்தார். படிப்படியாக அரசியல் செல்வாக்கு பெற்று. கடந்த 2004-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நவராங்பூர் தொகுதியில் போட்டியி்ட்டு வெற்றி பெற்றார். பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று , முதல்வர் நவீன்பட்நாயக் அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். எனினும் இவருக்கு எப்படியேனும் 12-ம் வகுப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் குறையவில்லலை. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தின் அரசுத்தேர்வுகள் கடந்த 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 10-ம் வகுப்பிற்கும், 12-ம் வகுப்பிற்கு நடந்தது. இதில் அமைச்சர் ரமேஷ்சந்திர மஜ்கி , தனது சொந்த மாவட்டமான நவரங்பூராவில் உள்ள பானபீடா மகாவித்யாலயா பள்ளியில் இவருக்கு தேர்வு எழுத ஹால்டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. தனி அறை ஒதுக்கப்பட்டு தேர்வு எழுதினார். நேற்று தேர்வு முடிகள் வெளியாயின. இதில் அமைச்சர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்நது அவருக்கு சக அமைச்சர்கள், உறவினர்கள் பாராட்டு தெரிவித்தனர். இது குறித்து அமைச்சர் கூறுகையில், தேர்வில் வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடநது கொண்டிருந்த நேரத்தில் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதால் சிரமம் பார்க்காமல் தேர்வு எழுதினேன். மேற்கொண்டு பட்டப்படிப்பு படிக்க இருப்பதாக தெரிவித்தார்.
பதிவு செய்தது ErodeTimes
news,
tamilnadu
5/31/2011 04:55:00 AM
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம்பிச்சை, பதவியேற்ற ஒரு வாரத்திலேயே விபத்தில் சிக்கி இறந்ததையடுத்து, திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவி காலியாக உள்ளது. தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், அத்தொகுதில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டசபை தொகுதிகளில், திருச்சி மேற்கு தொகுதி வி.ஐ.பி., அந்தஸ்து பெற்றுள்ளது. 1951ம் ஆண்டு முதல் முதலாக சட்டசபை தேர்தலை சந்தித்த இத்தொகுதியில், இதுவரை ஆறு முறை தி.மு.க.,வும், ஐந்து முறை அ.தி.மு.க.,வும், மூன்று முறை இந்திய பொதுவுடமை கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2006ல், நடந்த தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்ட நேரு, வெற்றி பெற்று அமைச்சரானார். 2008ல், நடந்த தொகுதி சீரமைப்புக்கு பின் சில மாற்றங்களுடன் திருச்சி 2வது தொகுதி, மேற்கு தொகுதியாக மாறியது.
கடந்த ஏப்ரல் 13ம் தேதி நடந்த தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் மரியம்பிச்சையும், தி.மு.க., சார்பில் நேருவும் போட்டியிட்டனர். இதில், மரியம்பிச்சை, 7,179 ஓட்டு வித்தியாசத்தில் நேருவை வீழ்த்தி, சுற்றுச்சூழல் மற்றும் சிறுபான்மையினர் துறை அமைச்சரானார்.
"நேருவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது' என்ற தோற்றத்தை மரியம்பிச்சை உடைத்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மரியம்பிச்சை கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். பதவியேற்ற ஒரு வாரத்திலேயே அமைச்சர் மரியம்பிச்சை இறந்ததால், திருச்சி மேற்கு தொகுதியில் இன்னும் ஆறு மாதத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தேர்தல் கமிஷன் விதிப்படி எம்.எல்.ஏ., பதவி காலியாக உள்ள தொகுதிகளில், ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தி புதிய எம்.எல்.ஏ.,வை தேர்ந்தெடுக்க வேண்டும். இடைத்தேர்தல் தேதி குறித்து முறைப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டு, 45 நாள் கழித்து தேர்தல் நடத்தப்படும். பிற மாநிலங்களில் எம்.எல்.ஏ., - எம்.பி., பதவிகள் காலியாக உள்ளதா என்பதை ஆராய்ந்து, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். இந்த நடைமுறை பணிகள் முடிய மூன்று மாதம் ஆகும்' என்றார்.
யார் வேட்பாளர்?
அமைச்சர் மரியம்பிச்சை இறந்ததால், மீண்டும் அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு, "சீட்' கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மரியம்பிச்சையின் மூத்த மகன் ஆசிக்மீரானுக்கு, 24 வயது தான் ஆகிறது. எம்.எல்.ஏ., தேர்தலில் போட்டியிட, 25 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்பதால், அவருக்கு, "சீட்' வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
அவரது குடும்பத்தில் யாரும் போட்டியிடவில்லை எனில், பேராசிரியர் சிராஜூதீன், கவுன்சிலர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், முன்னாள் அமைச்சர் பாலசுப்பிரமணியன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
பதிவு செய்தது ErodeTimes
erode,
news
5/31/2011 04:29:00 AM
இங்கிலாந்து ராணி கிரீடம் சின்னம் பொறிக்கப்பட்ட முத்திரை கட்டை புழக்கத்தில் இருந்து வருகிறது.
ஆங்கிலேயர் ஆட்சியில் தபால் துறை, ரயில்வேதுறை, நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை என அனைத்து துறைகளும் அறிமுகம் செய்யப்பட்டு செயல்பட்டது. இவர்களின் காலத்தில், வருவாய்த் துறையில் முத்திரை கட்டைகளின் மூலம் சீல் வைக்கும் வழக்கம் அறிமுகம் செய்யப்பட்டது.
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும், பெரும்பாலான அரசுத்துறை அலுவலகங்கள் ஆங்கிலேயர் கால கட்டித்தில் இயங்கிவருகிறது. ஆங்கிலேயர் பயன்படுத்திய முத்திரையில், இங்கிலாந்து ராணியின் கிரீடம் சின்னமும், ஆர்.சி., என்ற ஆங்கில எழுத்தும், சிலுவை சின்னமும் இடம்பெற்றிருக்கும். இந்த முத்திரைக் கட்டை, இன்றும் ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பயன்படுத்தப்படுகிறது. தரமான மரத்தால் ஆன, பித்தளையில் முத்திரை கொண்ட இந்த கட்டை இவ்வளவு காலமும், புதிதாக உள்ளது.
ஆட்சி மாறினாலே, பழைய திட்டங்களை தூக்கி எறியும் இந்தக் காலத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திய முத்திரை கட்டையை பத்திரமாக பாதுகாத்து, இன்று வரை பயன்படுத்தி வருவது ஆச்சர்யம் தருகிறது.
இதுபற்றி ஆர்.டி.ஓ., சுகுமார் கூறுகையில்,
இங்கிலாந்து ராணி கிரீடம் பொறித்த முத்திரை கட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு சொந்தமானது. இந்த முத்திரை கட்டையை நீண்ட காலமாக வைத்து பயன்படுத்தி வருகிறோம். ஆங்கிலேயர் கால கட்டிடத்தை போலவே, எங்கள் அலுவலக கட்டிடமும் அமைந்துள்ளது. தூண்கள் அனைத்தும் அவர்களது காலத்தை நினைவு படுத்தும் வகையிலேயே உள்ளன. ஆங்கிலேயர் காலப் பொருளை 60 ஆண்டு காலத்துக்கு மேல் பாதுகாத்து வைத்து, இன்றும் பயன்படுத்துவது பெருமைக்குறிய விஷயம். இந்த முத்திரைக்கான வரலாறு பற்றி, இங்கு உள்ளவர்கள் யாருக்கும் தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பதிவு செய்தது ErodeTimes
erode,
news
5/31/2011 04:24:00 AM
"சொட்டு நீர் பாசன கருவி மானியத்தொகையில் விவசாயிகளை அரசு ஏமாற்றுகிறது,'' என, அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் தளபதி குற்றம் சாட்டினார். ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் காமராஜ் தலைமை வகித்தார்.
அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் தளபதி பேசியதாவது: தமிழகத்தில் சொட்டு நீர் பாசன சாகுபடியில் ஈரோடு மாவட்டம் முன்னிலை பெற்றுள்ளது. தென்னை, கரும்பு, மஞ்சள், வாழை என பயிர்கள் சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க மத்திய அரசு 40 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் என, 65 சதவீதம் மானியம் அளிக்கிறது. சொட்டு நீர் பாசன கருவி அமைக்க 22 நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு பயிருக்கும் ஏற்றபடி, ஒரு ஏக்கருக்கு இவ்வளவு ரூபாய் செலவாகும் என, அதிகாரிகளே நிர்ணயித்துள்ளனர். உதாரணத்துக்கு, கரும்புக்கு சொட்டு நீர் பாசனம் கருவி அமைக்க ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்றால், அதில் 65 சதவீதம் மட்டும் மானியம் அளிக்கப்படுகிறது. ஆனால், அதிகாரிகள் கூறும் வகையில் 40 ஆயிரம் ரூபாய்க்குள் அச்செலவு முடிவதில்லை. அதற்கு மேலாகும் தொகையை விவசாயிகள் தான் இதுவரை செலுத்தி வந்தனர். 40 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே 65 சதவீதம் மானியம் வழங்கி, விவசாயிகளை அரசு ஏமாற்றி வருகிறது. சொட்டு நீர் பாசன கருவி அமைக்க விவசாயிகளிடம் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வாங்கினால், அந்நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுமென அரசு அறிவித்தது. அதனால், இரு மாதமாக சொட்டு நீர் பாசனம் அமைக்க எந்த நிறுவனமும் முன் வரவில்லை. எனவே, விவசாயிகள், நிறுவனங்களின் அதிகாரிகள், வேளாண் அதிகாரிகள் என, முத்தரப்பு குழு அமைத்து, தமிழகம் முழுவதிலும் சில மாவட்டங்களை தேர்வு செய்து, அங்கு குறிப்பிட்ட பயிர்களுக்கு, சொட்டு நீர் பாசன கருவி அமைத்து, எவ்வளவு செலவாகிறது என்பதை கண்டறிந்து, அதன்படி தான் மானியம் வழங்கும் தொகையை நிர்ணயிக்க வேண்டும்.
அப்போது தான், இத்திட்டத்தின் முக்கிய நோக்கமான நீர் சிக்கனம், மின் சிக்கனம், ஆட்கள் பற்றாக்குறை சரி செய்வது என்பது நிறைவேறும். அதேபோல், சில மாவட்டங்களில் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகள் முன் வருவதில்லை. அம்மாவட்டங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யாமல், சொட்டு நீர் பாசனம் அமைக்க முன் வரும் ஈரோடு, கோவை போன்ற மாவட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும். நபார்டு திட்டத்தில் 17 கோடியில் 60 கி.மீ.,க்கு தடப்பள்ளி வாய்க்கால் பணி நடக்கிறது. அப்பணியை ஒருவருக்கு கொடுப்பதால், நிறைவேற்றுவதில் சிக்கல் வரும். நான்கு பேருக்கு என, பிரித்துக் கொடுக்க வேண்டும் என கூறினோம்.
ஆனால், ஒருவருக்கே இப்பணி கொடுத்ததால், நான்கு மாதமாகியும் பணி முடியவில்லை. கிளை வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை. பொதுப்பணித்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.