சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக அப்ரிடி திடீர் அறிவிப்பு
sports 5/31/2011 10:04:00 AM
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சுமார் ஒரு வாரமே ஆகியிருக்கும் நேரத்தில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் சாகித் அப்ரிடி.
வீரர்களை மதிக்கத்தெரியாத கிரிக்கெட் சபையிடம் தொடர்ந்து நேரத்தை வீணாக்கப் போவதில்லை எனவும் காட்டமாக அவர் கூறியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் லீக் மற்றும் உள்ளூர் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.