மத்திய அமைச்சரவை இன்னும் இரண்டு வாரங்களில் விரிவு படுத்தப்படும்...
india, news 5/31/2011 09:54:00 AM
அடுத்த இரண்டு வாரங்களில் மத்திய அமைச்சரவை விஸ்தரிக்கப்பட உள்ளது.ரயில்வே அமைச்சர் பதவியை வகித்த மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வராகி விட்டார். மத்திய அமைச்சராக இருந்த பிருதிவிராஜ் சவுகான் மகாராஷ்டிர முதல்வராகி விட்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ராஜா அமைச்சர் பதவியிலிருந்து விலகியதால், தொலைத்தொடர்புத் துறையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கூடுதலாக கவனித்து வருகிறார்.எனவே, மத்திய அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு, இன்னும் இரண்டு வார காலத்தில் மத்திய அமைச்சரவை விஸ்தரிக்கப்படலாம் மற்றும் புதிய அமைச்சர்கள் நியமனம் நடக்கலாம் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.