Ads

தமிழகத்தில் புதிய திட்டம் என்ன ? கவர்னர் உரையில் அறிவிப்புகள் வரும்.,

புதிய சட்டசபை தேர்வு செய்யப்பட்ட பின்னர் அ.தி.மு.க., அரசின் முதல் சட்டசபை கூட்டம் வரும் 3 ம் கவர்னர் உரையுடன் துவங்குகிறது. இந்த உரையில் புதிய அரசின் செயல்படுத்தப்படவிருக்கும் முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இருக்கும். குறிப்பாக தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட தாலிக்கு இலவச தங்கம், மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப், உள்ளிட்ட திட்டம், எவ்வளவு காலத்தில் செயல்படுத்தப்படும் என்றும், மேலும் புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளும் கவர்னர் உரையில் இருக்கும். இந்த உரையில் இடம்பெற வேண்டிய சரத்துக்கள் குறித்து முதல்வர் ஜெ., தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. மின்வெட்டு சமாளிக்க தற்காலிக நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டன.


கடந்த 16ம் தேதி சென்னை பல்கலை நூற்றாண்டு மண்டபத்தில் முதல்வராக ஜெ., பதவியேற்றார். அதன்பின், கடந்த 23ம் தேதி புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து, 27ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடந்தது. வரும் 3ம் தேதி கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது.

பதிவு செய்தது ErodeTimes on 5/31/2011 04:38:00 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for தமிழகத்தில் புதிய திட்டம் என்ன ? கவர்னர் உரையில் அறிவிப்புகள் வரும்.,

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h