பதிவு செய்தது erodetimes
feature,
news
7/19/2011 02:46:00 PM
சென்னை: ரஜினி சிங்கப்பூரிலிருந்து வந்ததும், கேளம்பாக்கத்தில் பண்ணை வீட்டில் தங்குவார் என்று கூறப்பட்டது. இல்லையில்லை, போயஸ் கார்டனில்தான் தங்குவார் என சிலர் கூறிவந்தனர்.
ஆனால் உண்மையில் ரஜினி இப்போது தங்கியிருப்பது வீனஸ் காலனியில் உள்ள மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில்.போயஸ் கார்டனில் இன்னும் புதுப்பிப்புப் பணிகள் முடியவில்லையாம். வாஸ்து மற்றும் ரஜினியின் வசதிப்படி இன்னும் சில வேலைகள் நடந்து வருகின்றன.
ஆரம்பத்தில் கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு போகத்தான் ரஜினி விரும்பினாராம். பண்ணை வீடும் பக்காவாக தயார் செய்யப்பட்டது. ரஜினி அங்கே தங்கப்போவதை அறிந்து போலீஸ் பாதுகாப்பையும் அந்தப் பகுதியில் பலப்படுத்தியிருந்தது தமிழக அரசு.
ஆனால் பேரக் குழந்தைகள் யாத்ரா, லிங்காவை பார்க்க முடியாது என்பதாலும், நகரை விட்டு தூரமாக இருப்பதாலும் பண்ணை வீட்டுக்கு போகும் யோசனையைக் கைவிட்டாராம் ரஜினி.
ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் மூத்த மகள் ஐஸ்வர்யா வீடு இருக்கிறது. கணவர் தனுஷ் மற்றும் குழந்தைகளுடன் அவர் அந்த வீட்டில் வசிக்கிறார். அங்குதான் இப்போது ரஜினி தங்கியுள்ளார். அவர் தங்குவதற்காக அவ்வீட்டின் அறைகள் பிரத்யேகமாக புதுப்பிக்கப்பட்டு உள்ளன.
பேரக்குழந்தைகளுடன் விளையாடுவது ரஜினிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் என்பதாலும், குடும்பத்தினர் அனைவரும் அவர் உடனிருந்து நன்கு கவனித்துக் கொள்ள முடியும் என்பதாலும் ரஜினியின் இந்த புதிய முடிவை அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்.
அவ்வப்போது படவேலைகள் தொடர்பான கலந்துரையாடலை மட்டும் கேளம்பாக்கத்தில் வைத்துக்கொள்ள அவர் முடிவு செய்துள்ளார்.
பதிவு செய்தது erodetimes
astrology
7/19/2011 02:34:00 PM
கிரகம்: சூரியன்
ஸ்தலம்: சூரியனார் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: கோதுமை
வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்
மலர்: செந்தாமரை
உலோகம்: தாமிரம்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: மாணிக்கம்
பலன்கள்: காரிய சித்தி.
சூரியனார் கோவில் தொடர்பு எண்: 0435 -2472349.
கிரகம்: சந்திரன்
ஸ்தலம்: திங்களூர்
நிறம்: வெள்ளை
தானியம்: அரிசி
வாகனம்: வெள்ளை குதிரை
மலர்: வெள்ளரளி
உலோகம்: ஈயம்
நாள்: திங்கள்
ராசிகற்கள்: முத்து
பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.
கிரகம்: குரு
ஸ்தலம்: ஆலங்குடி
நிறம்: மஞ்சள்
தானியம்: கொண்டை கடலை
வாகனம்: அன்னம்
மலர்: வெண்முல்லை
உலோகம்: பொன்
நாள்: வியாழன்
ராசிகற்கள்: புஷ்பராகம்
பலன்கள்: சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி
கோவில் தொடர்பு எண்: 04374 -269407.
கிரகம்: ராகு
ஸ்தலம்: திருநாகேஸ்வரம்
நிறம்: கரு நிறம்
தானியம்: உளுந்து
வாகனம்: ஆடு
மலர்: மந்தாரை
உலோகம்: தாமிரம் மற்றும் கருங்கல்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: கோமேதகம்
பலன்கள்: எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்
கோவில் தொடர்பு எண்: 0435 - 2463354.
கிரகம்: புதன்
ஸ்தலம்: திருவென்காடு
நிறம்: பச்சை
தானியம்: பச்சைபயிர்
வாகனம்: குதிரை
மலர்: வெண்காந்தல்
உலோகம்: பித்தளை
நாள்: புதன்
ராசிகற்கள்: மகரந்தம்
பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்
கோவில் தொடர்பு எண்: 04364 - 256424.
கிரகம்: சுக்கிரன்
ஸ்தலம்: கஞ்சனூர்
நிறம்: வெள்ளை
தானியம்: மொச்சை
வாகனம்: கருடன்
மலர்: வெண்தாமரை
உலோகம்: வெள்ளி
நாள்: வெள்ளி
ராசிகற்கள்: வைரம்
பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்
கோவில் தொடர்பு எண்: 0435 - 2473737.
கிரகம்: கேதுஸ்தலம்: கீழ்பெரும் பள்ளம்
நிறம்: பல நிறம்
தானியம்: கொள்ளு
வாகனம்: சிங்கம்
மலர்: செவ்வள்ளி
உலோகம்: கருங்கல்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: வைடூரியம்
பலன்கள்: வறுமை, வியாதிகள் நீங்கும்.
கோவில் தொடர்பு எண்: 04364 - 275222.
கிரகம்: சனிஸ்தலம்: திருநள்ளாறு
நிறம்: கருப்பு
தானியம்: எள்
வாகனம்: காகம்
மலர்: கருங்குவளை
உலோகம்: இரும்பு
நாள்: சனி
ராசிகற்கள்: நீலம்
பலன்கள்: வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்
கோவில் தொடர்பு எண்: 04368 - 236530.
கிரகம்: செவ்வாய்
ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: துவரை
வாகனம்: ஆட்டுக்கடா
மலர்: செண்பகம்
உலோகம்: செம்பு
நாள்: செவ்வாய்
ராசிகற்கள்: பவழம்
பலன்கள்: பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்
கோவில் தொடர்பு எண்: 04364 - 279423.-
பதிவு செய்தது erodetimes
feature,
news,
tamilnadu
7/19/2011 02:25:00 PM
சென்னை: கோவை நமக்கு ராசியானதாக இல்லை. எனவே பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தை திருப்பூரில் நடத்தலாம் என திமுக தலைமைக்கு திருப்பூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் எடுத்துக் கூறியுள்ளனராம். எனவே பொதுக்குழுக் கூட்டம் திருப்பூரில் நடைபெறலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
சட்டசபைத் தேர்தலில் கிடைத்த மிகப் பெரிய தோல்வியால் துவண்டு போயுள்ளனர் திமுகவினர். மேலும் அடி மேல் அடியாக மாநிலம் முழுவதும் நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதாக கூறி திமுகவினர் மீது சரமாரியாக வழக்குளும் பாய்ந்து வருகின்றன. இந்த நிலையில் கட்சியினரை தைரியப்படுத்தும் வகையில் செயற்குழு, பொதுக் குழுக் கூட்டங்களை நடத்தி முக்கிய முடிவுகளை எடுக்க திமுக தலைமை திட்டமிட்டது.
அதன்படி கோவையில்வருகிற 23, 24 ஆகிய நாட்களில் இந்தக் கூட்டங்களை நடத்த தீர்மானித்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
கோவை நமக்கு ராசியாக இல்லை, சென்டிமென்ட்படி அது நமக்கு பலனைத் தரவில்லை. செம்மொழி மாநாடு கோவையில் நடத்தினோம். சென்னைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவை உருவாக்கினோம். இருப்பினும் கோவை மக்கள் நம்மைக் கைவிட்டு விட்டனர். மேலும், கோவையில்தான் ஜெயலலிதா முதலில் மிகப் பெரிய கூட்டத்தைக் கூட்டி பொதுக் கூட்டம் போட்டார். அந்த ராசி அவருக்குஒர்க் அவுட்ஆகி ஆட்சியையும் பிடிக்க உதவியது.
ஆனால் திமுகவோ ஆட்சியைப் பறி கொடுத்தது, திமுக குடும்பத்தினரை ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் தள்ள வைத்து விட்டது, கட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டது. எனவே நமக்கு கோவை ராசியானதாக இல்லை. எனவே இங்கு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த வேண்டாம். திருப்பூரில் நடத்தலாம் என மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவரான முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்ளிட்டோர் எடுத்துக் கூறியுள்ளனராம்.
இதுகுறித்து திமுக தலைமையும் யோசித்து வருவதாக தெரிகிறது. எனவே திருப்பூருக்கு பொதுக்குழுக் கூட்டம் மாறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதிவு செய்தது erodetimes
astrology
7/19/2011 11:34:00 AM
ஹோமங்களில் வளர்க்கப்படும் அக்னியை சாதாரண நெருப்பாகக் கருதக்கூடாது. அக்னிதேவன் மற்ற தெய்வங்களின் தூதர் போலவும், அவர்களது வாய் போலவும் செயல்படுகிறார். மனிதன் மற்ற தெய்வங்களுடன் தொடர்பு கொண்டு பேச அக்னியை பயன்படுத்திக் கொள்கிறான். உணவும் அக்னி மூலமே கொடுக்கப்படுகிறது.
பதிவு செய்தது erodetimes
feature,
india,
news,
tamilnadu
7/19/2011 11:28:00 AM
தமிழகத்தில், சமூக நலத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் தொட்டில் குழந்தை திட்டத்துக்கு, மாற்றுத் திட்டம் கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் பெண் சிசுக்கொலை, ஆரம்ப காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் பரவி வந்தது. 1985ம் ஆண்டில், தமிழகத்தின் தென் பகுதியான மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, தேனி பகுதியிலும், 1990ம் ஆண்டில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டத்திலும், இக்கொடூர பழக்கம் பரவியது. மனிதநேயமற்ற இந்த செயலில், ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் ஈடுபட்டது, ஆய்வின் மூலம் தெரிந்தது. பெண்களுக்கான சமூக, பொருளாதார திட்டங்கள் மூலம், பெண் குழந்தைகளுக்கு, அரசு பாதுகாப்பு உத்தரவாதங்களை கொடுத்த போதும், சிசுக்கொலை, கருக்கொலைகள், கடந்த காலங்களில் தொடர்ந்தன. தமிழகத்தில் பெண் சிசுக்கொலையைத் தடுக்கும் வகையில், 1991ம் ஆண்டில், சமூக நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ், தொட்டில் குழந்தை திட்டம் தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் துவங்கப்பட்டது. தர்மபுரியில், இத்திட்டத்துக்கு பெரும் அளவில் வரவேற்பு இல்லாமல் இருந்தது. இடைப்பட்ட சில ஆண்டுகளில், இத்திட்டத்துக்கு முக்கியத்துவம் குறைந்த நிலையில், 2002ம் ஆண்டு, ஏப்ரல் 13ம் தேதி, மீண்டும் இத்திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. தொட்டில் குழந்தை திட்டம் குறித்து, அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்ததால், அத்திட்டத்துக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது. தொட்டில் குழந்தை திட்டம், சிசுக்கொலைக்கு எதிரான திட்டம் என்ற போதும், தர்மபுரி மாவட்டத்தில், 2002ம் ஆண்டு முதல், 2006ம் ஆண்டு ஏப்ரல் வரை, 789 குழந்தைகள், தொட்டில் மையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இது, இரு நாட்களுக்கு ஒரு குழந்தை என்ற வீதத்தை எட்டியது.
தொட்டில் குழந்தை திட்டம், சிசுக்கொலையை தடுக்க துவங்கப்பட்டது என்ற போதும், புறக்கணிக்கப்படும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. தொட்டில் மையத்தில் குழந்தைகளை ஒப்படைக்க வரும் பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, குழந்தைகளை அவர்களே வளர்க்க அறிவுரை வழங்கப்பட்டது. இதன் விளைவாக, 2006 ஜூன் 24ம் தேதி முதல் இன்று வரை, 531 குழந்தைகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். 2002ம் ஆண்டு முதல் இன்று வரை, தர்மபுரி மாவட்டத்தில் ஆண் குழந்தைகள் 65, உள்ளிட்ட, 1,320 குழந்தைகள் (பெண் குழந்தைகள் 1, 255) ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பெற்றோர் இருந்தும், மனித நேயமற்ற முறையில் பெண் குழந்தைகள் அனாதையாக்கப்படும் நிலையை மாற்ற, தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்
2010
Erodetimes.in. All Rights Reserved.
-
Powered by w2h