Ads

பெட்ரோல் மீண்டும் விலை உயர்வு?!

பெட்ரோல் விலை மீண்டும் லீட்டருக்கு ரூ.1.35 வரை உயர்த்தப்பட இருப்பதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே 15ம் திகதி லீட்டருக்கு ரூ.5 ஆல் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருந்ததுடன், விரைவில் டீசல், சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்படவிருந்தன.


இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவன சேர்மென் புதோலா

இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்னெய் விலையுடன் ஒப்பிடும் போது, எம்மால் தாக்குபிடிக்க முடியவில்லை. லீட்டருக்கு ரூ.5 ஆல் பெட்ரோல் விலையை உயர்த்திய பிறகும், தமக்கு ரூ.4.58 நஷ்டம் ஏற்படுவதாக அந்நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.


இதனால் மீண்டும் பெட்ரோல் விலையை ரூ.1.35 ஆக உயர்த்த உள்ளதாகவும் நாளை (புதன்கிழமை) முதல் விலையேற்றம் அமலுக்கு வருவதாகவும் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, டீசல், மண்ணெணேய், உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களில் விலையை உயர்த்த வேண்டுமென பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளதுடன், மத்திய அர்சைன் கட்டுப்பாட்டில் உள்ள இம்மூன்று பொருட்களின் விலையை நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

பதிவு செய்தது ErodeTimes on 5/31/2011 12:50:00 PM. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for பெட்ரோல் மீண்டும் விலை உயர்வு?!

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h