இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை மற்றும் மண்சரிவு : பலி 8 ஆக உயர்வு
news, srilanka 5/31/2011 10:09:00 AM
கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலிப்பு தெரிவித்தார்.
கம்பஹா கொழும்பு களுத்துறை காலி குருனாகல் கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 507 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 50 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் 234 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 15 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் கூறினார்.
சில தினங்களாக நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் அடை மழையினால் பல தாழ்நில பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியதுடன் அவ்வாறான பகுதிகளில் போக்குவரத்து மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை என்பன பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று பல மேட்டு நிலப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனர்த்த நிவாரண சேவைகளை அந்தந்த மாவட்ட பிரதேச செயலகங்களினூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
கம்பஹா கொழும்பு களுத்துறை காலி குருனாகல் கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 507 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 50 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் 234 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 15 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் கூறினார்.
சில தினங்களாக நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் அடை மழையினால் பல தாழ்நில பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியதுடன் அவ்வாறான பகுதிகளில் போக்குவரத்து மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை என்பன பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று பல மேட்டு நிலப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனர்த்த நிவாரண சேவைகளை அந்தந்த மாவட்ட பிரதேச செயலகங்களினூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.