Ads
இசைஞானி எதிர்பார்க்கும் இரண்டு
பதிவு செய்தது ErodeTimes cinema 5/11/2011 05:29:00 PMஇசைஞானி இளையராஜா சமீபமாக தான், இசையமைத்துள்ள எண்ணற்ற படங்களில் இரண்டு படங்களின் வெளியீட்டை பெரிதாக எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதில் ஒரு படம் சுசீந்திரன் இயக்கியுள்ள “அழகர்சாமியின் குதிரை” மற்றொருபடம் ரத்னகுமார் இயக்கியுள்ள “செங்காத்து பூமியிலே”.
இந்த இரண்டு படங்களின் ரீ-ரெக்கார்டிங்கிலும் காட்சிகளைப் பார்த்து கண்கலங்கியதாக சொல்லும் இசைஞானி, சில மாத இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு பட இசை வெளியீட்டிலும் கலந்து கொண்டு நெஞ்சுருக பேசியது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இளையராஜா தான் இசையமைத்த படங்கள் என்றாலும் அதன் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.
இந்த இரண்டு படங்களின் ரீ-ரெக்கார்டிங்கிலும் காட்சிகளைப் பார்த்து கண்கலங்கியதாக சொல்லும் இசைஞானி, சில மாத இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு பட இசை வெளியீட்டிலும் கலந்து கொண்டு நெஞ்சுருக பேசியது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இளையராஜா தான் இசையமைத்த படங்கள் என்றாலும் அதன் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.
தபாங் ரீ-மேக்கில் சிம்புவுக்கு ஜோடி கிடைச்சாச்சு!
பதிவு செய்தது ErodeTimes cinema 5/11/2011 05:27:00 PMஇந்தியில் சல்மான் கான் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற “தபாங்” படம் தமிழில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இப்படத்தை தில், தூள், கில்லி போன்ற ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் தரணி இயக்குகிறார்.
“குருவி” படத்திற்கு பின் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தரணி இப்படத்தை இயக்குகிறார். படத்தின் ஹீரோவாக நமது சிம்பு என்ற எஸ்.டி.ஆர்., நடிக்கிறார். படத்தில் சிம்புவுக்கு நாயகியாக பாலிவுட் நடிகை ஒருவர் நடிப்பதாக கூறப்பட்டு வந்தநிலையில், இறுதியாக தெலுங்கு நடிகை ரிச்சா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தமன் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பூஜை 9ம் தேதி திங்கள் அன்று துவங்குகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தி தபாங் படத்தின் தயாரிப்பாளரும், சல்மான்கானின் சகோதராருமான அர்பாஸ் கான் பங்கேற்கிறார்.
“குருவி” படத்திற்கு பின் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தரணி இப்படத்தை இயக்குகிறார். படத்தின் ஹீரோவாக நமது சிம்பு என்ற எஸ்.டி.ஆர்., நடிக்கிறார். படத்தில் சிம்புவுக்கு நாயகியாக பாலிவுட் நடிகை ஒருவர் நடிப்பதாக கூறப்பட்டு வந்தநிலையில், இறுதியாக தெலுங்கு நடிகை ரிச்சா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தமன் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பூஜை 9ம் தேதி திங்கள் அன்று துவங்குகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தி தபாங் படத்தின் தயாரிப்பாளரும், சல்மான்கானின் சகோதராருமான அர்பாஸ் கான் பங்கேற்கிறார்.
மே 12ல் திரைக்கு வருகிறது அழகர்சாமியின் குதிரை!
பதிவு செய்தது ErodeTimes cinema, feature 5/11/2011 05:25:00 PM“வெண்ணிலா கபடிக்குழு”, “நான் மகான் அல்ல” போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் சுசீந்திரன், அடுத்து “அழகர்சாமியின் குதிரை” என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஹீரோவாக “வெண்ணிலா கபடிக்குழு” படத்தில் நடித்த அப்பு குட்டி நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக சரண்யா மோகன் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்து இருக்கிறார். மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “அழகர்சாமியின் குதிரை” படம், கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசாக வேண்டியது. ஆனால் சில பல பிரச்சனைகளால் இப்படம் தள்ளிக் கொண்டே போனது.
இந்நிலையில் படம் எப்போது ரிலீசாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் மதன் வருகிற மே 12ம் தேதி அழகர்சாமியின் குதிரை நிச்சயம் ரிலீசாகும் என்று உறுதியாக கூறியிருக்கிறார்.
அவருக்கு ஜோடியாக சரண்யா மோகன் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்து இருக்கிறார். மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “அழகர்சாமியின் குதிரை” படம், கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசாக வேண்டியது. ஆனால் சில பல பிரச்சனைகளால் இப்படம் தள்ளிக் கொண்டே போனது.
இந்நிலையில் படம் எப்போது ரிலீசாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் மதன் வருகிற மே 12ம் தேதி அழகர்சாமியின் குதிரை நிச்சயம் ரிலீசாகும் என்று உறுதியாக கூறியிருக்கிறார்.
விக்ரம் நடிக்கும் வேந்தன்!
பதிவு செய்தது ErodeTimes cinema 5/11/2011 05:23:00 PMதெய்வமகன், பிதா, தெய்வத்திருமகன் என்று மூன்று கட்ட தலைப்புக்கு பின்னர் இறுதியாக “தெய்வத்திருமகள்” என்று விக்ரம் படத்திற்கு பெயரிட்டுள்ளனர். விஜய் டைரக்ட் செய்திருக்கும் இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
இந்நிலையில் “தெய்வத்திருமகள்” படத்தை தொடர்ந்து, “சீயான்” விக்ரம் அடுத்து டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இப்படத்தில் விக்ரம் ஜோடியாக தீக்ஷா செத், காவலன் மித்ரா, நாடோடிகள் அபிநயா என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். முழுக்க ஆக்ஷன் கலந்த அதிரடியுடன் கமர்சியல் படமாக இப்படம் எடுக்கப்பட இருக்கிறது.
படத்திற்கு “வேந்தன்” என்று பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தின் சூட்டிங் ஜூன் மாதம் துவங்கப்பட இருக்கிறது
இந்நிலையில் “தெய்வத்திருமகள்” படத்தை தொடர்ந்து, “சீயான்” விக்ரம் அடுத்து டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இப்படத்தில் விக்ரம் ஜோடியாக தீக்ஷா செத், காவலன் மித்ரா, நாடோடிகள் அபிநயா என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். முழுக்க ஆக்ஷன் கலந்த அதிரடியுடன் கமர்சியல் படமாக இப்படம் எடுக்கப்பட இருக்கிறது.
படத்திற்கு “வேந்தன்” என்று பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தின் சூட்டிங் ஜூன் மாதம் துவங்கப்பட இருக்கிறது
கிளப்பில் சூதாட்டம்: நடிகர் ரவிதேஜா தந்தை கைது
பதிவு செய்தது ErodeTimes cinema 5/11/2011 05:21:00 PMபிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜா. இவரது சகோதரர்கள் ரகுபாபு, பரத் ஆகியோர் போதை பொருள் விற்றதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். தற்போது ரவிதேஜாவின் தந்தையும் சூதாட்டம் ஆடியதாக கைதாகியுள்ளார்.
இவரது பெயர் பூபதி ராஜூ. கிளப்பில் பூபதி ராஜூவும், மேலும் சிலரும் சூதாட்டம் ஆடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையொட்டி போலீசார் கிளப்பை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர். அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த பூபதிராஜூவை கைது செய்தனர். அவருடன் மேலும் பலரும் கைதானார்கள்.
சூதாட்டத்துக்காக வைத்திருந்த ரூ.38 ஆயிரத்து 350 ரொக்கத்தையும் கைப்பற்றினார்கள்.
இதுபற்றி போலீசார் உதவி கமிஷன் வாசுசேனா கூறும்போது சூதாட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம். அதை மீறி கிளப்பில் ரகசிய சூதாட்டம் ஆடிய பூபதி ராஜூ உள்பட 46 பேரை கைது செய்துள்ளோம் என்றார்.
கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பு: விஜய், இலியானாவை பார்க்க திரண்ட கல்லூரி மாணவர்கள்; அவினாசி சாலையில் பரபரப்பு
பதிவு செய்தது ErodeTimes cinema 5/11/2011 05:20:00 PM கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பில் விஜய்- இலியானாவை பார்ப்பதற்கு கல்லூரி மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமீர்கான் நடிப்பில் வெளியாகி இந்தியில் ஹிட்டான “3 இடியட்ஸ்” படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.
ஷங்கர் இயக்குகிறார். இதில் அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய் நடிக் கிறார். கதாநாயகியாக இலியானாவும், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. தொடர்ந்து திருமண ஊர்வலம் மற்றும் பாடல் காட்சியை படமாக்குவதற்காக படப்பிடிப்பு குழுவினர் கோவை வந்தனர். இன்று காலை 6 மணி முதல் ஊர்வல காட்சி அவினாசி சாலை ஜென்னி கிளப் முன்பு படமாக்கப்பட்டது.
இதில் நடிகர் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோர் நடித்தனர். மார்வாடி வீட்டு திருமண காட்சி போல பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காலை 9 மணி வரை ஊர்வல காட்சி படமாக்கப்பட்டதற்கு அருகில் உள்ள கல்லூரியில் உள்ள மாணவ- மாணவியருக்கு “நண்பன்” படப்பிடிப்பு பற்றிய தகவல் பரவியது.
அவர்கள் விஜய், இலியானாவை பார்க்கும் ஆவலில் ஜென்னி கிளப் முன்பு திரண்டனர். நூற்றுக்கணக்கில் மாண வர்கள் முற்றுகையிட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக் கப்படும் சூழல் ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு ஜென்னி கிளப் வளாகத்துக்கு மாற்றப்பட்டது. மாணவர்கள் விஜய், இலியானாவை வாழ்த்தி கோஷமிட்டனர்.
அவர்கள் அங்கு இல்லாத போதும் மாணவர்கள் ஆர்வ கோளாறினால் முண்டி யடித்துக் கொண்டு நின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இன்று மாலையில் திருமண பாடலில் நடிகர் விஜய், இலியானா பங்கேற்று நடனமாவது போன்ற காட்சிகள் படம் பிடிக்கப்படுகிறது. முன்ன தாக நடிகை இலியானா ரெசிடென்சி ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். படப்பிடிப்பு ஏற்பாடுகளை கோவை பாபு செய்திருந்தார்.
ஷங்கர் இயக்குகிறார். இதில் அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய் நடிக் கிறார். கதாநாயகியாக இலியானாவும், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. தொடர்ந்து திருமண ஊர்வலம் மற்றும் பாடல் காட்சியை படமாக்குவதற்காக படப்பிடிப்பு குழுவினர் கோவை வந்தனர். இன்று காலை 6 மணி முதல் ஊர்வல காட்சி அவினாசி சாலை ஜென்னி கிளப் முன்பு படமாக்கப்பட்டது.
இதில் நடிகர் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோர் நடித்தனர். மார்வாடி வீட்டு திருமண காட்சி போல பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காலை 9 மணி வரை ஊர்வல காட்சி படமாக்கப்பட்டதற்கு அருகில் உள்ள கல்லூரியில் உள்ள மாணவ- மாணவியருக்கு “நண்பன்” படப்பிடிப்பு பற்றிய தகவல் பரவியது.
அவர்கள் விஜய், இலியானாவை பார்க்கும் ஆவலில் ஜென்னி கிளப் முன்பு திரண்டனர். நூற்றுக்கணக்கில் மாண வர்கள் முற்றுகையிட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக் கப்படும் சூழல் ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு ஜென்னி கிளப் வளாகத்துக்கு மாற்றப்பட்டது. மாணவர்கள் விஜய், இலியானாவை வாழ்த்தி கோஷமிட்டனர்.
அவர்கள் அங்கு இல்லாத போதும் மாணவர்கள் ஆர்வ கோளாறினால் முண்டி யடித்துக் கொண்டு நின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இன்று மாலையில் திருமண பாடலில் நடிகர் விஜய், இலியானா பங்கேற்று நடனமாவது போன்ற காட்சிகள் படம் பிடிக்கப்படுகிறது. முன்ன தாக நடிகை இலியானா ரெசிடென்சி ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். படப்பிடிப்பு ஏற்பாடுகளை கோவை பாபு செய்திருந்தார்.
செல்வராகவன் படத்தில் நடிக்க நடிகை ஆண்ட்ரியா மறுப்பு
பதிவு செய்தது ErodeTimes cinema, feature 5/11/2011 05:17:00 PM“பச்சைக்கிளி முத்துச்சரம்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. “ஆயிரத்தில் ஒருவன்” படத்திலும் நடித்தார். இப்படத்தில் நடித்தபோது ஆண்ட்ரியாவுக்கும் செல்வராகவனுக்கும் காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கப்பட்டது.
இதுவே செல்வராகவன்-சோனியா அகர்வால் விவாகரத்துக்கு காரணமாக அமைந்தது என்றும் கூறப்பட்டது. பின்னர் செல்வராகவன் “இரண்டாம் உலகம்” படத்திலும் ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதன் படப்பிடிப்பிலும் பங்கேற்று சில காட்சிகளில் நடித்தார். இந்த நிலையில் செல்வராகவன்- கீதாஞ்சலி திருமணம் நடந்தது. நீண்ட இடைவெளிக்கு பின் “இரண்டாம் உலகம்” படப்பிடிப்பை செல்வராகவன் மீண்டும் துவக்கி உள்ளார்.
இதில் நடிக்க ஆண்ட்ரியாவை அழைத்தபோது மறுத்து விட்டார். படத்தை முடித்து கொடுக்குமாறு செல்வராகவன் திரும்ப திரும்ப வேண்டியும் அவர் வரவில்லை.
இதையடுத்து ஆண்ட்ரியாவுக்கு பதில் ரிச்சா கங்கா பாத்யாய் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ஆண்ட்ரியா நடித்த காட்சிகள் வெட்டி எறியப்பட்டு விட்டதாம்.
என் வாழ்க்கையும் ஒபாமா வாழ்க்கையும் ஒன்று: மல்லிகா ஷெராவத்!
பதிவு செய்தது ErodeTimes cinema 5/11/2011 05:16:00 PMபாலிவுட்டின் கவர்ச்சி நாயகி மல்லிகா ஷெராவத், ஹாலிவுட் நடிகர் ஜாக்கி ஜானுடன் “மித்” படத்தில் நடித்தது மூலம் பிரபலமானார். இப்போது முழுநேர ஹாலிவுட் நடிகையாக மாறி வரும் அவர், சமீபத்திய சிலகாலமாக அமெரிக்காவிலேயே தங்கியிருந்தார். அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார்.
பல நாட்களுக்கு பிறகு இந்தியா வந்து இறங்கியிருக்கும் மல்லிகா, ஒபாமாவுடனான நெகிழ்ச்சியான சந்திப்பு கூறியதாவது, அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்த போது நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். என்னுடைய படங்கள் பற்றி நிறைய கேட்டறிந்தார். பிறகு என்னுடைய லவ் படத்தின் பிரீமியர் ஷோவிற்கு அழைத்தேன். அவரும் வருவதாக கூறினார். என்னுடைய வாழ்க்கையும், அதிபர் ஒபாமாவின் வாழ்க்கையை போன்றது தான்.
இந்தியாவிலேயே அதிபர் ஒபாமாவை சந்தித்த ஒரே நடிகை நான் தான். இது எனக்கு கிடைத்த பெருமை. பலர் என்னிடம் நான் சுயசரிதை எழுதப்போவதாக கேட்கின்றனர். சுயசரிதை எழுதும் அளவுக்கு இன்னும் நான் வளரச்சி அடையவில்லை.
சினிமாவில் இன்னும் நிறைய சாதித்த பின்னர் நிச்சயம் சுயசரிதை எழுதுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் 2011
பதிவு செய்தது ErodeTimes astrology, feature 5/11/2011 05:12:00 PM
| ||||
இந்த ஆண்டு குருபெயர்ச்சி மே மாதம் 8ஆம் தேதி; ராகு-கேது மே மாதம் 16ஆம் தேதி; சனி டிசம்பர் மாதம் 10ஆம் தேதி; இந்த மூன்று ராஜ கிரகங்கள் இந்த ஆண்டு இடமாற்றம் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல; மாதாமாதம் மாற்றம் அடைகின்ற புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய் ஆகியவற்றில் மாற்றங்களையும் கணக்கில் கொண்டு இந்த தமிழ்ப் புத்தாண்டு பலன்களை இங்கே அளித்திருக்கிறோம். இந்த தமிழ் புத்தாண்டு நல்ல ஆண்டாக மலர எங்களது வாழ்த்துகள். மொத்தத்தில் இது சுப ஆண்டு. நன்றி:சென்னை ஆன்லைன். |
விரும்பும் வண்ணமாக காட்சி தரும் கடவுள்..!
பதிவு செய்தது ErodeTimes pakthi 5/11/2011 05:10:00 PM —
ஒரு மனிதன் காட்டுக்குள் சென்றான். அங்கு ஒரு மரத்தின் மீது சின்ன விலங்கொன்றைப் பார்த்தான்.திரும்பி வந்த போது மற்றொரு மனிதனிடம், காட்டில் ஒரு அழகான சிவப்பு நிற விலங்கைப் பார்த்ததாகச் சொன்னான்.
அதைக் கேட்ட அம்மனிதன், “நானும் காட்டுக்குள் போன போது அந்த விலங்கைப் பார்த்தேன். ஆனால் அது பச்சை நிறமாக இருந்தது. நீ ஏன் சிவப்பு என்று சொல்கிறாய்?” என்றான்.
அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்னொருவன், அவர்கள் இருவர் சொல்வதுமே தவறு என்றும் அந்த விலங்கின் நிறம் மஞ்சள் என்றும் தெரிவித்தான்.
இப்படியாக அங்கிருந்த ஒவ்வொருவரும், தாங்களும் அந்த விலங்கைப் பார்த்திருப்பதாகவும் ஆனால் பிறர் கூறும் நிறங்கள் தவறென்றும், தாங்கள் கண்டதே சரியென்றும் கூறினார்கள். ஒருவரை ஒருவர் நம்பாமல் தொடர்ந்த இந்த உரையாடல் வாக்குவாதமாக உருவெடுத்தது.விவாதத்துக்கு தீர்வு காணவென்று அனைவரும் சேர்ந்து அந்த மரத்தடிக்குச் சென்றார்கள்.
அந்த மரத்தடியிலே வாழ்ந்து வரும் ஒருவனிடம், தங்கள் பிரச்சனையை சொன்னார்கள். அவன், “ஆம், இந்த மரத்தடியில் நான் வெகு காலமாக வாழ்ந்து வருவதால், நீங்கள் சொல்லும் விலங்கைப் பற்றி நன்கு அறிவேன். நீங்கள் சொன்னது அனைத்துமே சரிதான். அந்த விலங்கு ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு நிறமாகத் தோன்றுவது உண்மைதான். சமயத்தில் நிறமே இல்லாமல் கூடத் தோன்றும் அதன் பெயர் பச்சோந்தி”, என்று தெரிவித்தான்.
இவ்விதமாகவே இறையன்பர்களும் தாங்கள் விரும்பும் வண்ணமாகவே இறைவனைக் காண்கிறார்கள். இறைவனும் தன் அளப்பரிய அன்பினால் தன் பக்தன் எப்படி விரும்புகிறானோ அவ்விதமாகவே அவனுக்குக் காட்சி அளிக்கிறான்.
=============================================
–ஸ்ரீ ராமகிருஷ்ணர்
ஒரு மனிதன் காட்டுக்குள் சென்றான். அங்கு ஒரு மரத்தின் மீது சின்ன விலங்கொன்றைப் பார்த்தான்.திரும்பி வந்த போது மற்றொரு மனிதனிடம், காட்டில் ஒரு அழகான சிவப்பு நிற விலங்கைப் பார்த்ததாகச் சொன்னான்.
அதைக் கேட்ட அம்மனிதன், “நானும் காட்டுக்குள் போன போது அந்த விலங்கைப் பார்த்தேன். ஆனால் அது பச்சை நிறமாக இருந்தது. நீ ஏன் சிவப்பு என்று சொல்கிறாய்?” என்றான்.
அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்னொருவன், அவர்கள் இருவர் சொல்வதுமே தவறு என்றும் அந்த விலங்கின் நிறம் மஞ்சள் என்றும் தெரிவித்தான்.
இப்படியாக அங்கிருந்த ஒவ்வொருவரும், தாங்களும் அந்த விலங்கைப் பார்த்திருப்பதாகவும் ஆனால் பிறர் கூறும் நிறங்கள் தவறென்றும், தாங்கள் கண்டதே சரியென்றும் கூறினார்கள். ஒருவரை ஒருவர் நம்பாமல் தொடர்ந்த இந்த உரையாடல் வாக்குவாதமாக உருவெடுத்தது.விவாதத்துக்கு தீர்வு காணவென்று அனைவரும் சேர்ந்து அந்த மரத்தடிக்குச் சென்றார்கள்.
அந்த மரத்தடியிலே வாழ்ந்து வரும் ஒருவனிடம், தங்கள் பிரச்சனையை சொன்னார்கள். அவன், “ஆம், இந்த மரத்தடியில் நான் வெகு காலமாக வாழ்ந்து வருவதால், நீங்கள் சொல்லும் விலங்கைப் பற்றி நன்கு அறிவேன். நீங்கள் சொன்னது அனைத்துமே சரிதான். அந்த விலங்கு ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு நிறமாகத் தோன்றுவது உண்மைதான். சமயத்தில் நிறமே இல்லாமல் கூடத் தோன்றும் அதன் பெயர் பச்சோந்தி”, என்று தெரிவித்தான்.
இவ்விதமாகவே இறையன்பர்களும் தாங்கள் விரும்பும் வண்ணமாகவே இறைவனைக் காண்கிறார்கள். இறைவனும் தன் அளப்பரிய அன்பினால் தன் பக்தன் எப்படி விரும்புகிறானோ அவ்விதமாகவே அவனுக்குக் காட்சி அளிக்கிறான்.
=============================================
–ஸ்ரீ ராமகிருஷ்ணர்
சிவ ராத்திரி
பதிவு செய்தது ErodeTimes pakthi 5/11/2011 05:09:00 PM ——————————————————-
சிவராத்திரி
—————
விரதம் இருப்பது எப்படி?
சிவராத்தியன்று சிவாலயத்திற்கு வில்வ இலையுடன்
செல்ல வேண்டும்
இரவு கடைசி ஜாம பூஜை வரை அங்கே இருக்க
வேண்டும்
‘சிவாய நம’ என உச்சரிக்க வேண்டும்
அன்று சாப்பிடக்கூடாது.
நோயாளிகள் எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
முதல் ஜாம பூஜைக்கு பால், அடுத்த பூஜைக்கு தயிர்,
மூண்றாம் ஜாமத்திற்கு வெண்ணெய், நான்காவது
ஜாமத்திற்கு தேன் ஆகியவற்றை அபிஷேகம் செய்வதற்காக
கோயிலில் ஒப்படைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் அன்னதானம் செய்ய வேண்டும்.
அன்னாதானத்துக்கு பிறகே சாப்பிட்டு விரத்ததைதை
பூர்த்தி செய்ய வேண்டும்
-==============================================
நன்றி: தினமலர்
சிவராத்திரி
—————
விரதம் இருப்பது எப்படி?
சிவராத்தியன்று சிவாலயத்திற்கு வில்வ இலையுடன்
செல்ல வேண்டும்
இரவு கடைசி ஜாம பூஜை வரை அங்கே இருக்க
வேண்டும்
‘சிவாய நம’ என உச்சரிக்க வேண்டும்
அன்று சாப்பிடக்கூடாது.
நோயாளிகள் எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
முதல் ஜாம பூஜைக்கு பால், அடுத்த பூஜைக்கு தயிர்,
மூண்றாம் ஜாமத்திற்கு வெண்ணெய், நான்காவது
ஜாமத்திற்கு தேன் ஆகியவற்றை அபிஷேகம் செய்வதற்காக
கோயிலில் ஒப்படைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் அன்னதானம் செய்ய வேண்டும்.
அன்னாதானத்துக்கு பிறகே சாப்பிட்டு விரத்ததைதை
பூர்த்தி செய்ய வேண்டும்
-==============================================
நன்றி: தினமலர்
ஸ்ரீராமநவமி
பதிவு செய்தது ErodeTimes pakthi 5/11/2011 05:08:00 PMஅஷ்டமி, நவமி ஆகிய இரு திதி தேவதைகளும்,
“எங்களை எல்லாரும் கெட்டவர்களாகவே பார்க்கின்றனர்…’
என்று, மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர்களது
வருத்தத்தைப் போக்க, அஷ்டமி திதியில், கிருஷ்ணராகவும்,
நவமி திதியில் ஸ்ரீராமராகவும் அவதரித்தார் விஷ்ணு பகவான்.
அந்த ராமர் அவதரித்த நாள் தான், ராம நவமி.
சித்திரை பெருமை..
பதிவு செய்தது ErodeTimes feature, pakthi 5/11/2011 05:05:00 PMசித்திரையில் ஏராளமான புனித நாட்கள் மலர்கின்றன!
-
மதுரையம்பதியில் உறையும் தமிழரசியான அன்னை மீனாட்சி, காதல் கொண்டு சுந்தரேஸ்வரரை மணம் புரிந்த நன்னாள் சித்திரை பௌர்ணமியிலேயே நிகழ்ந்தது.
ஆண்டு தோறும் இதை தமிழ் மக்கள் மதுரையிலும் இதர இடங்களிலும் மகிழ்ந்து கொண்டாடுவது இன்றும் நடக்கும் பெரும் திருவிழாவாக அமைகிறது.
-
திருமணஞ்சேரியிலும் அன்னையும் அப்பனும் மணம் புரியும் நாள் இதே சித்திரையில்தான்!
-
மகாவிஷ்ணு மச்சாவதாரம் எடுத்தது சித்திரைத் திங்களில்தான்!
-
மஹாலக்ஷ்மி பூமிக்கும் வந்ததும் சித்திரையில்தான்!
-
அம்பிகையின் அவதாரம் சித்திரை அஷ்டமி என்பதும்
சங்கரர் சித்திரை அமாவாசை கழிந்த பஞ்சமியில் உதித்தார் என்பதும்
ராமானுஜரும் இதே சித்திரையிலேயே அவதரித்தார் என்பது
சித்திரையின் மகத்துவத்தை இன்னும் அதிகம் கூட்டும் பெரும் புனித நிகழ்வுகளாகும். .
தெய்வ பலம் வேண்டும்..!
பதிவு செய்தது ErodeTimes feature, pakthi 5/11/2011 05:04:00 PM-
ராஜசூய யாகம் செய்ய விரும்பினார் தர்மபுத்திரர். அதற்கு, தெய்வ பலம்
முக்கியம் என்பதால், கிருஷ்ணனிடம் அதை நடத்தி வைக்க வேண்டுமென்று
கேட்டுக் கொண்டார்; பகவானும் ஒப்புக் கொண்டார்.
ராஜசூய யாகம் என்றால், திக் விஜயம் செய்து, எல்லா அரசர்களையும்
ஜெயிக்க வேண்டும்.
-
மற்ற அரசர்களை ஜெயித்து விடலாம் அல்லது அவர்களை தன் வசப்படுத்தி
விடலாம்; ஆனால், ஜராசந்தனை ஜெயிப்பது சிரமம். அதனால், இதற்கு
பீமன் தான் சரியானவன் என்று எண்ணினார். ஜராசந்தன் என்பவன், இரு
உடற்கூறுகள் ஒன்றாக சேர்ந்த உருவம். அவனை வதம் செய்ய என்ன
செய்ய வேண்டும் என்பது கண்ணனுக்கு தெரியும்.
-
பீமன், ஜராசந்தன் யுத்தம் துவங்கியது. ஜராசந்தனை இரண்டாகக் கிழித்துப்
போட்டான் பீமன்; ஆனால், அது ஒன்று சேர்ந்து விட்டது. ஜராசந்தன்
எழுந்து வந்து யுத்தம் செய்தான். இப்படி பலமுறை, அவனை பீமன் கிழித்துப்
போட்டும் கூட, அவை ஒன்று சேர்ந்து விட்டது. பீமனுக்கு என்ன செய்வதென்றே
தெரியவில்லை. பக்கத்தில் நின்றிருந்த கிருஷ்ணனை, பரிதாபமாக பார்த்தான்.
-
உடனே, ஒரு தருப்பையை எடுத்து, இரண்டாக கிழித்து, தலைப்பை மாற்றி
கீழே போட்டான் கிருஷ்ணன். இதை கவனித்த பீமன், புரிந்து கொண்டான்.
உடனே, ஜராசந்தனை பிடித்து, அவன் கால்களை பிடித்திழுத்து, இரண்டு
கூறுகளாக்கி தலைப்பை மாற்றி, கீழே போட்டான். தலைப்பு மாறி கிடந்த
ஜராசந்தன் எழுந்து வந்து ஒட்டிக் கொள்ள முடியாமல் மாண்டு போனான்.
பிறகு, ராஜசூய யாகம் நடந்தது.
-
எவ்வளவு பலமிருந்தாலும் தெய்வ பலம் அவசியம். அதே போல, ராஜசூய
யாகத்தில் யார், யார் என்ன பொறுப்பு வகிக்க வேண்டும் என்பதையும்
தீர்மானம் செய்தார் பகவான். துரியோதனனுக்கு பொக்கிஷ சாலை பொறுப்பு;
கர்ணனுக்கு தானம் கொடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
-
துர்புத்தியுள்ள துரியோதனன் சந்தோஷப்பட்டான். கர்ணனிடம், தானம்
செய்யும் போது, ஒன்றுக்கு பத்தாக அள்ளிவிடு; பொக்கிஷம் காலியாகி
விடும்; யாக நடுவில் பொக்கிஷம் காலியானால், தர்மத்துக்கு ஒன்றும்
இல்லாமல் தர்ம புத்திரர் அவமானப்படுவார்; நாம் சந்தோஷப்படலாம்…’
என்றான்; கர்ணனும் சம்மதித்தான்.
-
ஆனால், கர்ணன் எவ்வளவுதான் வாரி, வாரிக் கொடுத்தாலும், பொக்கிஷம்
நிரம்பிக் கொண்டேயிருந்தது. பொருள் மேலும், மேலும் வந்து குவிந்து
கொண்டே இருந்தது. இவர்கள் திட்டம் பலிக்கவில்லை; அவமானப்பட்டனர்.
-
என்ன காரணம்? துரியோதனன் கையில் தன ரேகை இருக்கிறது; இது
பகவானுக்கு தெரியும். பொக்கிஷத்தை அவனிடம் ஒப்படைத்தால், பொக்கிஷம்
நிரம்பிக் கொண்டே இருக்கும். அதனால், அதை, அவனிடம் ஒப்படைத்தார்.
கர்ணனுக்கு தானம் செய்வதில் விருப்பம் அதிகம்; சளைக்கவே மாட்டான்;
அள்ளி, அள்ளிக் கொடுப்பான். யாகத்தில் அது தானே முக்கியம். அதனால்,
தானம் செய்வதை கர்ணனிடம் ஒப்படைத்தார்.
-
யாகம் நன்றாகவே நடைபெற்று முடிந்தது. துரியோதனனும், கர்ணனும்
போட்ட திட்டம் நிறைவேறவில்லை;பகவான் போட்ட திட்டம் தான்
நிறைவேறியது. நம்முடைய புத்திக்கு அப்பாற்பட்டது தெய்வ பலம். அந்த
பலத்தையே நாட வேண்டும்; மற்றபடி சவடால் பேர் வழிகளை நம்பினால்,
நடுத்தெருவில் நிற்க வேண்டியது தான்!
இறைவனின் அருள்!
பதிவு செய்தது ErodeTimes feature, pakthi 5/11/2011 05:03:00 PM–
வாழ்க்கைக்கு ஒழுக்கம் மிக அவசியம். ஒழுக்கமே ஒவ்வொருவரதுவாழ்க்கையையும் மேம்படுத்தும். ஒழுக்கமுள்ள வாழ்வு வாழ
இறைவனின் அருளும் நமக்குத் தேவை.
-
ஓரிடத்தில் விளக்கு இருப்பது நமக்குத் தெரிந்தால்தானே, அந்த விளக்கை
ஏற்றி வைத்து நம்மால் வெளிச்சத்தைப் பெற முடியும்.
-
விளக்கு எங்கே இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளவும் நமக்கு
ஒரு வெளிச்சம் தேவைப்படுவதைப் போல, இறைவனை வணங்கவும்,
வாழவும் இறைவனின் அருள் நமக்குத் தேவை.
-
இதை மாணிக்கவாசகப் பெருமான் தமது சிவபுராணத்தில்,
“அவனருளாலே அவன்தாள் வணங்கி
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தைவினை முழுதும் ஓய உரைப்பன் யான்’
எனப் பாடி பரவசப்படுகிறார்.
-
இறைவனை வழிபடவும் இறைவனின் அருள் இருந்தால்தான் முடியும்.
அப்படிப்பட்ட இறையருளைப் பெற ஒழுக்கம் நிறைந்த வாழ்வு நமக்கு
வழி காட்டுகிறது. அதற்கு நாள்தோறும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்.
நல்லனவற்றையே எண்ணி, நல்லனவற்றையே பேச வேண்டும். அப்படிச்
செய்யும்போது மனம் இறைவன் அருள் பெற ஏதுவாகிறது. மனம்
பண்பட்டவுடன் இறையருள் அங்கே உதயமாகிறது.
-
பண்பட்ட நிலம் பயிர்த்தொழிலுக்கு ஏற்றதாகிற மாதிரி, பண்பட்ட உள்ளம்
வழிபாட்டுக்கு ஏற்றதாகிறது. அப்படி பண்பட்ட உள்ளத்தினை உடையவர்கள்
தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அந்த நேரத்தில் இறைவனை
வழிபடவேண்டும். இறைவனிடம் இடைவிடாத பக்தி செலுத்த வேண்டும்.
நல்ல மனத்தையும் நல்ல சிந்தனைகளையும் அருளும்படி இறைவனிடம்
நாம் வேண்டிக்கொள்ள வேண்டும்.
-
ஒழுக்கம் அவரவர் நிலைக்கு ஏற்றபடி மாறும்.
முனிவர்களின் ஒழுக்கம் துறவறம் மேற்கொள்வது; பண்டிதனின் ஒழுக்கம்
தான் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுப்பது; மாணவர்களின் ஒழுக்கம் குருவின்
சொல்படி நடத்தல். இப்படி ஒழுக்கம் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது.
-
ஒழுக்கமான வாழ்வுக்கு மனம் அடங்கப்பெறல் வேண்டும். இறைவனை
நினைக்கும்போது மட்டும் மனம் அடங்குகிறது. மனம் அடங்கினால் நம்
அகங்காரத் துடிப்புகள் அடங்கி இறைவனுடன் ஒன்ற முடிகிறது. இறைவன்
மட்டுமே இன்ப துன்பங்கள், விருப்பு வெறுப்புகள், லாப நஷ்டங்கள், நல்லது,
தீயதுகள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவன்.
-
வேறு உலகப் பொருள்களும் பந்தங்களும் அவற்றின் மீது பிரியம் வைக்கும்
மனிதனையும் பந்தப்படுத்தி விடுகின்றன. அதனால் பிறவித் தளையில்
சிக்கிக் கொண்டு தவிக்கிறான். எனவே, பற்று அற்றவனாகிய இறைவன் மீதே
நாம் பற்று வைக்க வேண்டும்.
-
இறைவன் தன்னிடம் வந்து சேர்கின்ற இறையடியார்களைத் தன்னுடைய
அருள் என்னும் தீயால் எரித்து, பாவங்களைப் போக்கி, தூய்மைப்படுத்துகிறான்.
அவனால் மட்டுமே அது முடியும்.
-
இறைவனை நினைப்பதால் இறைவனைப் போலவே ஆகிவிட முடியும்.
இறைவனைப் போன்று பேரானந்தமயமாய் விளங்க முடியும். இறைவன்
நித்தியானந்தனாய் விளங்குபவன்; அழிவு என்பதே இல்லாதவன்; அழியும்
இயல்பு உடைய நம்மை அழியாமல் காக்க அவனால் மட்டுமே முடியும்.
அவன் தூய்மையே வடிவெடுத்தவன். வினைப்பயனால் விளைந்த
பாவங்களைச் சுமந்து கொண்டிருக்கும் நம்மை பரிசுத்தமாக்க அவனால் மட்டுமே
முடியும். அவன் பால் பக்தி செலுத்தி அவன் மயமாகமாற வாய்ப்பிருக்கும்
போது ஏன் நாம் உலக விவகாரங்களில் சிக்கிக் கொண்டு திணற வேண்டும்?
-
ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து, மனத்தைத் தூய்மைப்படுத்தி அதனை
இறைவன் உறையும் ஆலயமாக ஆக்குவோம்!
===========================================
-கதிரொளி இராமசாமி, சென்னை – 82.
நன்றி: குமுதம் பக்தி ஸ்பெஷல்