தாராபுரம் ஐடிஐ விண்ணப்பங்கள் வரவேற்பு
education 5/31/2011 05:04:00 AM
அரசு தொழில்பயிற்சி நிலைய முதல்வர் கண்ணப்பன் கூறியதாவது: தாராபுரம் நஞ்சியம்பாளையத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி பெற்றவர்கள் பொருத்துனர், கடைசல் பிடிப்பவர், இயந்திர வேலையாள் மற்றும் உற்பத்தி மற்றும் தயாரிப்பு ஆகிய தொழில் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கம்பியாள், கம்மியர், இயந்திர கலப்பை மற்றும் அச்சுவார்ப்பவர் ஆகிய தொழில் பிரிவுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுடைய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பயிற்சியில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஐ.டி.ஐ., சான்றிதழ்கள் வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும், மத்திய, மாநில பொது மற்றும் துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. இலவச பயிற்சி, இலவச பஸ் பாஸ், தகுதி வாய்ந்த பயிற்சியாளர்களுக்கு அரசு அனுமதிக்கும் உதவித்தொகை, முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய். கூடுதல் விபரம் பெற 04258 - 230207 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்தார்