சிங்கப்பூர் பேட்மிண்டன் : இரண்டாம் சுற்றுடன் வெளியேறினார் சாய்னா நேவால்
feature, sports 6/18/2011 09:18:00 AM
இந்தியாவின் நம்பர் 1 பேட்மிண்டன் வீராங்கணை சாய்னா நேவால், சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இரண்டாம் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.
இவர் இப்போட்டித்தொடரில் நடப்பு சாம்பியனாக இருந்த போதும், நேற்றைய போட்டியில் சீனா தாய்பேயின் ஷாவோ சியா ஷெங்கிடம் வீழ்ச்சி கண்டார்.
முதல் செட்டை எளிதாக சாய்னா கைப்பற்றிய போதும், அடுத்த இரு செகளிலும் ஷாவோ வெற்றி பெற்றார். இறுதியில் 8-21, 21-10, 21-19 என்ற செட் கணக்கில் ஷோ வென்றார்.