இலங்கை - இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிகிறது!
sports 5/30/2011 11:44:00 PM
இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைய உள்ளது.
இங்கிலாந்தின் Cardiff மைதானத்தில் இடம்பெற்று வரும் இப்போட்டியின் ஐந்தாவது நாளான இன்று மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 400 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக பிரசன்ன ஜெயவர்த்தன 112 ரன்களையும், பரனவிதான 66 ரன்களையும் எடுத்தனர்.
பந்துவீச்சில் ஆண்டர்சன் , ஸ்வான் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய இங்கிலாந்து அணி, தற்போதைய ஐந்தாவது நாள் ஆட்டம் வரை தனது ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது. தற்சமயம் 5 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 491 ரன்களை அவ் அணி பெற்றுள்ளது.
ட்ரோட் 203 ரன்களையும், அண்டிருவ் கோக் 133 ஓட்டங்களையும் எடுத்துள்ளனர். பந்துவீச்சில் லக்மல், டில்ஷான், மஹ்ரூப், மெண்டிஸ், ஹேரத் ஆகியோர் தலா ஒருவிக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர்.
இரு அணிகளும் தமது முதல் இன்னிங்ஸை மாத்திரமே விளையாடியுள்ள அணியில், இப்போட்டி சமநிலையில் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி, ஜூன் 3ம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவிருக்கிறது.
இங்கிலாந்தின் Cardiff மைதானத்தில் இடம்பெற்று வரும் இப்போட்டியின் ஐந்தாவது நாளான இன்று மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 400 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக பிரசன்ன ஜெயவர்த்தன 112 ரன்களையும், பரனவிதான 66 ரன்களையும் எடுத்தனர்.
பந்துவீச்சில் ஆண்டர்சன் , ஸ்வான் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய இங்கிலாந்து அணி, தற்போதைய ஐந்தாவது நாள் ஆட்டம் வரை தனது ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது. தற்சமயம் 5 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 491 ரன்களை அவ் அணி பெற்றுள்ளது.
ட்ரோட் 203 ரன்களையும், அண்டிருவ் கோக் 133 ஓட்டங்களையும் எடுத்துள்ளனர். பந்துவீச்சில் லக்மல், டில்ஷான், மஹ்ரூப், மெண்டிஸ், ஹேரத் ஆகியோர் தலா ஒருவிக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர்.
இரு அணிகளும் தமது முதல் இன்னிங்ஸை மாத்திரமே விளையாடியுள்ள அணியில், இப்போட்டி சமநிலையில் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி, ஜூன் 3ம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவிருக்கிறது.