மறு பரிசீலனையில் சியான் விக்ரமின் கரிகாலன்!
cinema 5/30/2011 11:38:00 PM
தமிழ் சினிமாவை மட்டும்மல்ல ஆந்திர சினிமாவையும் புரட்டிப் போட்ட படம் மஹாதீரா. மகாதீரா ஆந்திராவில் கடந்த ஆண்டு துவக்கத்திலேயே வெளியாகி பழைய வசூல் சாதனைகளை எல்லாம் சுக்கு சுக்கலாக அடித்து நொறுக்கியது.
இந்தப்படத்தை முதலில் தமிழில் டப் செய்து வெளியிடும் உரிமையை வாங்கினார் தயாரிப்பாளர் தாணு.
ஆனால் மகாதீரா படத்தின் ஹீரோ ராம்சரன் தேஜாவின் அப்பா, சிரஞ்சீவி காங்கிரஸில் தனது கட்சியை இணைத்தார். இதனால் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்ததால், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு மகாதீரா கைமாறி விடப்பட்டது.
தற்போது இந்தப்படத்தை டப்பிங் படம் என்று தெரியாத வகையில் தரமாக டப் செய்து தமிழ்நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டிலும் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மாவீரன் ரிலீஸ் செய்யப்பட்ட தியேட்டர்களுக்கு கூட்டமே வரவில்லை என்பதுதான் பெரிய ஆச்சர்யம்.
மாகாதீராவைத் தொடர்ந்து சரித்திரக்கதைகள் மீது கோலிவுட்டில் ஆர்வம் ஏற்பட்டதால் பொன்னர் சங்கர், அரவான் ஆகிய படங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதில் பொன்னர் சங்கர் சுமாரான வெற்றியையே பெறமுடிந்தது.
இன்னோரு பக்கம் பொன்னியின் செல்வனை படமாக்குவதை நிறுத்தினார் மணிரத்தினம். ஆனால் சியான் விக்ரம் கரிகாலச் சோழனாக நடிக்கும் படத்தை சரித்திரக்கதையாகதான் எடுக்க இருகிறாராம் அதன் இயக்குனர் கண்ணன். இப்போது மாஹாதீராவின் கதையைப் பார்த்து கரிகாலன் படத்தை டிராப் செய்யலாமாக என்று டிஸ்கஸ் செய்து வருகிறார்களாம்.
இந்தப்படத்தை முதலில் தமிழில் டப் செய்து வெளியிடும் உரிமையை வாங்கினார் தயாரிப்பாளர் தாணு.
ஆனால் மகாதீரா படத்தின் ஹீரோ ராம்சரன் தேஜாவின் அப்பா, சிரஞ்சீவி காங்கிரஸில் தனது கட்சியை இணைத்தார். இதனால் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்ததால், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு மகாதீரா கைமாறி விடப்பட்டது.
தற்போது இந்தப்படத்தை டப்பிங் படம் என்று தெரியாத வகையில் தரமாக டப் செய்து தமிழ்நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டிலும் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மாவீரன் ரிலீஸ் செய்யப்பட்ட தியேட்டர்களுக்கு கூட்டமே வரவில்லை என்பதுதான் பெரிய ஆச்சர்யம்.
மாகாதீராவைத் தொடர்ந்து சரித்திரக்கதைகள் மீது கோலிவுட்டில் ஆர்வம் ஏற்பட்டதால் பொன்னர் சங்கர், அரவான் ஆகிய படங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதில் பொன்னர் சங்கர் சுமாரான வெற்றியையே பெறமுடிந்தது.
இன்னோரு பக்கம் பொன்னியின் செல்வனை படமாக்குவதை நிறுத்தினார் மணிரத்தினம். ஆனால் சியான் விக்ரம் கரிகாலச் சோழனாக நடிக்கும் படத்தை சரித்திரக்கதையாகதான் எடுக்க இருகிறாராம் அதன் இயக்குனர் கண்ணன். இப்போது மாஹாதீராவின் கதையைப் பார்த்து கரிகாலன் படத்தை டிராப் செய்யலாமாக என்று டிஸ்கஸ் செய்து வருகிறார்களாம்.