அமைச்சர் மரியம் பிச்சை மரணத்துக்குக் காரணமான லாரி பிடிபட்டது
feature, news, tamilnadu 5/30/2011 11:10:00 PM
தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த மரியம் பிச்சை மரணத்துக்குக் காரணமான லாரி பிடிபட்டது.
தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மரியம் பிச்சை, கடந்த மே 23ம் தேதி, திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் வந்துகொண்டிருந்த போது, பெரம்பலூர்- பாடாலூர் அருகில் கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் இறந்தார்.
இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார், மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்ட கண்டெய்னர் லாரி குறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் உள்பட பலரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று மேற்குவங்க மாநிலத்தில் அந்த கண்டெய்னர் லாரியைக் கண்டுபிடித்த சிபிசிஐடி போலீஸார், விசாரணைக்காக அந்த லாரியை சென்னைக்குக் கொண்டு வருகின்றனர். இந்தத் தகவலை சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.
தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மரியம் பிச்சை, கடந்த மே 23ம் தேதி, திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் வந்துகொண்டிருந்த போது, பெரம்பலூர்- பாடாலூர் அருகில் கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் இறந்தார்.
இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார், மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்ட கண்டெய்னர் லாரி குறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் உள்பட பலரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று மேற்குவங்க மாநிலத்தில் அந்த கண்டெய்னர் லாரியைக் கண்டுபிடித்த சிபிசிஐடி போலீஸார், விசாரணைக்காக அந்த லாரியை சென்னைக்குக் கொண்டு வருகின்றனர். இந்தத் தகவலை சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.