Ads

கொலை வழக்குகளில் தொடர்புடையவர் கைது

கோபிசெட்டிபாளையம்: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை போலீஸார் கைது செய்தனர். கோபி புதுப்பாளையம் பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணன்(26). பழ வியாபாரி. கடந்த 2011 ஃபிப்ரவரி 10ம் தேதி பழ வியாபாரம் முடிந்து, மொடச்சூர் ரோட்டில் சென்றார்.ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு சிகரெட் பிடித்து புகை விட்டார். அங்கிருந்த இரு வாலிபர் மீது புகை பட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அவ்விருவரும் சேர்ந்து கல்லை போட்டு சரவணனை கொன்றனர்.கோபி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கொலை தொடர்பாக வடக்கு வீதியை சேர்ந்த செம்பட்டை என்பவரை கைது செய்தனர். கோபி செல்லம்மாள் நகரை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் தலைமறைவாக இருந்தார். கோபி வேட்டைக்காரன் கோவிலில் இருந்த மகேஸ்வரனை (28), நேற்று போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், 2011ல் பெருந்துறையில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு, 2008ல் கவுந்தபாடியில் கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் கடத்தல் வழக்கு, 2007ல் ஓமலூரில் கொலை வழக்கு, 2006ல் பெருந்துறையில் ஒரு திருட்டு வழக்கு உள்பட 11 வழக்குகளில் தொடர்புடையது தெரியவந்தது.கைது செய்யப்பட்ட மகேஸ்வரன், கோபி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.

பதிவு செய்தது ErodeTimes on 5/30/2011 12:26:00 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for கொலை வழக்குகளில் தொடர்புடையவர் கைது

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h