Ads

தொட்டில் குழந்தை திட்டத்துக்கு மாற்று திட்டம் எதிர்பார்ப்பு

தமிழகத்தில், சமூக நலத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் தொட்டில் குழந்தை திட்டத்துக்கு, மாற்றுத் திட்டம் கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் பெண் சிசுக்கொலை, ஆரம்ப காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் பரவி வந்தது. 1985ம் ஆண்டில், தமிழகத்தின் தென் பகுதியான மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, தேனி பகுதியிலும், 1990ம் ஆண்டில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டத்திலும், இக்கொடூர பழக்கம் பரவியது. மனிதநேயமற்ற இந்த செயலில், ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் ஈடுபட்டது, ஆய்வின் மூலம் தெரிந்தது. பெண்களுக்கான சமூக, பொருளாதார திட்டங்கள் மூலம், பெண் குழந்தைகளுக்கு, அரசு பாதுகாப்பு உத்தரவாதங்களை கொடுத்த போதும், சிசுக்கொலை, கருக்கொலைகள், கடந்த காலங்களில் தொடர்ந்தன. தமிழகத்தில் பெண் சிசுக்கொலையைத் தடுக்கும் வகையில், 1991ம் ஆண்டில், சமூக நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ், தொட்டில் குழந்தை திட்டம் தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் துவங்கப்பட்டது. தர்மபுரியில், இத்திட்டத்துக்கு பெரும் அளவில் வரவேற்பு இல்லாமல் இருந்தது. இடைப்பட்ட சில ஆண்டுகளில், இத்திட்டத்துக்கு முக்கியத்துவம் குறைந்த நிலையில், 2002ம் ஆண்டு, ஏப்ரல் 13ம் தேதி, மீண்டும் இத்திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. தொட்டில் குழந்தை திட்டம் குறித்து, அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்ததால், அத்திட்டத்துக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது. தொட்டில் குழந்தை திட்டம், சிசுக்கொலைக்கு எதிரான திட்டம் என்ற போதும், தர்மபுரி மாவட்டத்தில், 2002ம் ஆண்டு முதல், 2006ம் ஆண்டு ஏப்ரல் வரை, 789 குழந்தைகள், தொட்டில் மையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இது, இரு நாட்களுக்கு ஒரு குழந்தை என்ற வீதத்தை எட்டியது.

தொட்டில் குழந்தை திட்டம், சிசுக்கொலையை தடுக்க துவங்கப்பட்டது என்ற போதும், புறக்கணிக்கப்படும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. தொட்டில் மையத்தில் குழந்தைகளை ஒப்படைக்க வரும் பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, குழந்தைகளை அவர்களே வளர்க்க அறிவுரை வழங்கப்பட்டது. இதன் விளைவாக, 2006 ஜூன் 24ம் தேதி முதல் இன்று வரை, 531 குழந்தைகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். 2002ம் ஆண்டு முதல் இன்று வரை, தர்மபுரி மாவட்டத்தில் ஆண் குழந்தைகள் 65, உள்ளிட்ட, 1,320 குழந்தைகள் (பெண் குழந்தைகள் 1, 255) ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பெற்றோர் இருந்தும், மனித நேயமற்ற முறையில் பெண் குழந்தைகள் அனாதையாக்கப்படும் நிலையை மாற்ற, தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் 


பதிவு செய்தது erodetimes on 7/19/2011 11:28:00 AM. Filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for தொட்டில் குழந்தை திட்டத்துக்கு மாற்று திட்டம் எதிர்பார்ப்பு

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h