Ads

கோர்ட்டுக்கு தவறான தகவல்:டிராபிக் ராமசாமிக்கு 10 ஆயிரம் அபராதம்


சென்னை, ஜூன், 18 - சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு ஐகோர்ட் ரூ.10 ஆயிரம் விதித்தது. இது குறித்த விபரம் வருமாறு:- சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், ஊழல் ஒழிப்புக்கான லோக்பால் சட்ட மசோதா வரவு கமிட்டியில் தென் மாநிலத்திற்கு பிரதி நிதித்துவம் வழங்க வேண்டும் என்று நான் மத்திய அரசுக்கு மனு கொடுத்திருந்தேன். அம்மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
இதை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், nullநீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.   பின்னர் அவர்கள் கூறும் போது, டிராபிக் ராமசாமி மத்திய அரசுக்கு மனு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் இம்மனுவை அவரது தனிச் செயலாளர் தான் கொடுத்துள்ளார். எனவே டிராபிக் ராமசாமி கோர்ட்டுக்கு தவறான தகவல் கொடுத்துள்ளார்.


பொது நல வழக்கு என்ற பெயரில் இது போன்ற வழக்கை தாக்கல் செய்து கோர்ட்டு நேரத்தை வீணடித்துள்ளார். டிராபிக் ராமசாமியின் வயது கருதி அவருக்கு இந்த கோர்ட்டு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கிறது. அவர் இதை 3 வாரத்தில் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையக் குழுவிடம் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதே போல லோக்பால் சட்ட மசோதா வரைவு கமிட்டியில் பெண்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் வழங்க கோரி வழக்கில் பழனிமுத்து தாக்கல் செய்த மனுவை nullநீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இம்மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பதிவு செய்தது ErodeTimes on 6/18/2011 09:27:00 AM. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for கோர்ட்டுக்கு தவறான தகவல்:டிராபிக் ராமசாமிக்கு 10 ஆயிரம் அபராதம்

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h